Breaking News

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை – சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு!!

  • Share on

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சியில் உள்ள

1. ஆரோக்கியபுரம்

2. பவி ஶ்ரீநகர்

3. ஆ. சண்முகபுரம்

4. பாண்டியாபுரம்

5. சகாயமாதாபட்டிணம்

6. பூப் பாண்டியாபுரம்

7. நேரு நகர்

8. பெரிய செல்வன் நகர்

9. சமீர்வியாஸ் நகர்

10. இந்திராநகர்

11. தாளமுத்துநகர்

12. வண்ணாரப்பேட்டை
உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையினால் தேங்கியிருந்த மழைநீர் நிலைமைக்கான ஆய்வை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று மேற்கொண்டார்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மின்மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணிகளை பரிசோதித்த அவர், அதிகமாக தேங்கி இருந்த இடங்களில் உடனடி நீர்நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

பள்ளமாக இருந்த சாலைகளில் சரள் அடித்து செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகளைவும் நேரில் பார்த்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, உதவி பொறியாளர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C. ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், நெல்சன், ஜேசுராஜ், பாரதி, தங்கமாரிமுத்து, சக்தி, கிளை செயலாளர் முருகன் உள்ளிட்டோர் உடன் இணைந்து செயல்பட்டனர்.


  • Share on

தூத்துக்குடி 1-வது வார்டு பள்ளிச்சாலை நிலையை நேரில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் விரைவான தீர்வு நடவடிக்கைகள்!

  • Share on

Trending News