Breaking News

ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஓட்டப்பிடாரத்தில் பாஜக விளக்கப் பிரச்சார கூட்டம்!!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் வடக்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி வரி குறைப்பு விளக்கப் பிரச்சார கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகத் தலைவர் சரவணா கிருஷ்ணன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடன் மாவட்ட பொதுச் செயலாளர் சேது ராஜ், விவசாயி அணி மாவட்டத் தலைவர் ஜெயகண்ணன், பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் கந்தசாமி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெய்சங்கர், தற்போதைய ஒன்றியத் தலைவர் நாகஜோதி சிவா, இளைஞர் அணி ஒன்றியத் தலைவர் பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் அதனால் பொதுமக்கள், சிறு தொழிலாளர்கள், வணிகர்கள் பெறும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.


  • Share on

பாஜகவில் புதிய அலை — செய்திங்கநல்லூரில் 30 பேருக்கு தாமரைக் கொடி வரவேற்பு!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மேல மருதூரில் நீண்டநாள் கனவு நனவானது — குடிநீர் வசதி கிடைத்தது!!

  • Share on

Trending News