பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து தனது பணியால் அழியாத முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா நாளை (24.09.2025) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.