ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டம் மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை ஆர்.சி. சர்ச் வளாகத்தில் வைத்து இன்று மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமானது ஸ்காட் நிறுவனத்தலைவர் முனைவர் சு. கிளீட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படியும் திட்ட இயக்குனர் சார்லஸ் அவர்கள் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது. டாக்டர் கே.பி. ராஜா ஸ்டாலின், தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைமையேற்றும், வி. நோவா கோவில் பிள்ளை முன்னிலை வகித்து ஆரம்பித்து வைத்தார்கள். J. ராஜன், J. வெள்ளைச்சாமி, ஜசக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இம்முகாமில் மொத்தம் 98 நபர்கள் கலந்து கொண்டார்கள். 26 நபர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 9 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், 15 நபர்கள் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஸ்காட் நிர்மான் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் வளர்ச்சி அலுவலர் பரமசிவன் குழுவினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.