தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்கம்மாள்புரம் செல்வம் கமலா இல்ல புதுமனை புகுவிழா சார்பாக சின்ன மாட்டுவண்டி போட்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது. இதில் மொத்தம் என்பதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றது. இந்த மாட்டு வண்டி போட்டி சேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
விழாவில் அயிரவன்பட்டி முருகேச பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போட்டியில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் பொன் முருகன் ரேக்ளா ரேஸ் மாநில தலைவர் திருநெல்வேலி வேலங்குளம் கண்ணன் மதுரை மோகன் சாமி குமார் ஆகியோர் மாட்டுவண்டி போட்டிகளை தொடங்கி வைத்தனர்
இதில் ஜக்கம்மாள்புரம் மகா பில்டர்ஸ் ரெட்டையாவதி எல்.எம்.சி ரூபாய் 25,000 பெற்று முதல் பரிசை தட்டியது அழகு சின்ன மாங்குளம் வேலங்குளம் எம் கண்ணன் ரூபாய் 23 ஆயிரம் இரண்டாம் பரிசை பெற்றது மேலும் சாயல்குடி நளினி கனக பிரியா மூன்றாம் பரிசு பெற்று ரூபாய் 20 ஆயிரம் பணம் முடிப்பை பெற்றது மேலும் கச்சேரி தளவாய்புரம் தா ஈஸ்வரன் மீனாட்சி ஈராச்சி வீரபாண்டி பிரதர்ஸ் நான்காம் பரிசு பெற்று ரூபாய் 15,000 பண மதிப்பை பெற்றனர் பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் நெல்லிக்குப்பம் சீனி பாண்டியன் ரெட்டியாபட்டி ரூபாய் 22 ஆயிரம் பெற்று முதல் பரிசை தட்டினர் எம் செல்வம் அரசரடி ரூபாய் 17000 பெற்று இரண்டாம் பரிசை பெற்றனர் மூன்றாம் பரிசு உசேன் பிரதர்ஸ் குமரட்டியாபுரம் எம்.எஸ். கமலா ஜக்கம்மாள்புரம் ரூபாய் 12000 பெற்று பெற்றனர். நான்காம் பரிசாக ரவி கண்ணன் ஏ.எம் பட்டி சரவண பிரதர்ஸ் திருபுவன வாசல் ரூபாய் பத்தாயிரம் பெற்று நான்காம் பரிசு பெற்றனர்.