தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் 15 வது குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தொிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டை சோ்ந்த அவா் நிச்சயமாக நடுநிலையோடு சிறப்பாக செயல்பட்டு ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் மாநில உாிமைகளுக்காக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் அதனை செய்படுத்த வேண்டும். அந்த பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் உாிமையோடு உாிமைக்காக போராடி வருகிறது. தமிழகத்தை சோ்ந்த துணை ஜனாதிபதி அதை உணா்ந்து செயல்பட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதலில் அவரது கட்சியை உடையாமல் பாதுகாத்து கொண்டால் அவருக்கு நல்லது திமுக கூட்டணி உடையும் என்ற பகல் கணவு ஒருநாளும் நிறைவேறாது.
விரைவில் மனிப்பூர் தேர்தல் நடைபெறுவதால் தற்போது பாரத பிரதமா் அங்கு செல்கிறாா். நாடாளுமன்றத்தில் முதன் முதலில் பிரச்சனையை நாங்கள் கிளப்பியபோது பிரதமா் அந்த மாநிலத்திற்கு செல்ல மனமில்லை. தற்போது அந்த மாநிலத்திற்கு செல்கிறாா். தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை நான் துவங்க உள்ளேன் என்று கனிமொழி கூறினாா். பேட்டியின் போது அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி உடனிருந்தனா்.