Breaking News

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஓசநூத்து, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், சங்கரராஜபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ரூ. 280 கோடி மதிப்பில் புதிய மின் தடம் அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ. சண்முகையா தொடங்கி வைத்தார்!!

  • Share on

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் இருந்து ஒசநூத்து, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், சங்கரராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 352 விவசாய மின் இணைப்புகளுக்கு  மும்முனை மின்சாரம் வழங்கும் வகையில் ரூ. 280 கோடி மதிப்பில் புதிய மின் வழித்தடம் அமைக்கும் பணியினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா இன்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி பொறியாளர் மணிசேகர், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி, தொண்டரணி கோபால், ஆவரங்காடு கிருஷ்ணசாமி, ஓசநூத்து சண்முகம், கந்தசாமிபுரம் சுரேஷ், கைலாசபுரம் முருகன், வட்ட செயலாளர் ராஜன், உலகையா, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழகு, ஒப்பந்தக்காரர் முருகன், மாடசாமி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



  • Share on

முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நடைபெற்ற வீரர் அழகு முத்து கோன் பிறந்தநாள் விழாவையொட்டி திருவுருவப் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து சண்முகையா எம்.எல்.ஏ மரியாதை!!

தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவிக்கு எம். மருதப்பெருமாள் எம்.காம் விருப்ப மனு!!

  • Share on

Trending News