தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு கொம்பகோனார் பேரவை மற்றும் யாதவர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை ஆறுமுகம், தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு, கொம்பகோனார் பேரவை மாநில செயலாளர் கெங்கமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், ஹரிபாலகிருஷ்ணன், இளம் பேச்சாளர் சண்முகநாராயணன், தகவல் தொழில்நுட்ப அணி வசந்த், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், மாரிச் செல்வம், ஒன்றிய மகளிரணி முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.