தூத்துக்குடியில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி 45 வது வார்டுக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் சந்திப்பில் பிரையன்ட் நகர் பகுதி மற்றும் 45 வது வட்ட கழக திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான என். பெரியசாமியின் திருவுருவப் படத்திற்கு 45 வது வட்ட கழக மூத்த முன்னோடிகள் தலைமையில், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர், தூத்துக்குடி மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர், 45 வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, 44 வது வட்ட செயலாளர் சுப்பையா, 45 வது வட்ட பிரதிநிதி பச்சை பெருமாள், கல்யாணி (எ) சிவசுப்பிரமணியன், சதீஷ் குமார் , முருகன், வசந்த குமார், ஜேசு, பகுதி தொண்டர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமரன், விவசாய அணி அமைப்பாளர் பெரிய நாயகம், நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கி துரை, 44 வது வட்ட பிரதிநிதி சரவணன், பகுதி பிரதிநிதி சுகன்யா ஸ்டுடியோ செந்தில், ஜெகன் எ சுப்பிரமணிய கட்டபொம்மு, ஆட்டோ முருகன், குமார், கவுன்சிலர் சரவணகுமார், தொழில்நுட்ப அணி அண்ணா துரை உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.