தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மாநகர குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர குழு உறுப்பினர் எம்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தற்போதைய சமூக சூழ்நிலையில் குடும்ப நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்களின் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து இதுபோன்ற சமூகப் பொறுப்புள்ள நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.