பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் மகேந்திரன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, அய்யனார், சுப்புராஜ், சிவசுப்பிரமணியன், தமிழரசன், சங்கரலிங்கம், வெங்கடேஷ், ராஜதுரை, மாரிராஜ், பாக முகவர் குருசாமி, பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் முனியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.