தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்கேஎஸ்ஆர் காலனி பகுதியில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பூங்கா பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், குழந்தைகள் விளையாடவும் ஏற்ற வகையில் பூங்கா வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.