திருச்செந்தூர் கும்பாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா போன்ற பெரும் திருவிழாக்கள் இந்த ஆண்டு எந்தவித இடையூறும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த வெற்றிக்குப் பின்னால் தவறாது கண்காணித்து பாதுகாப்பு வழங்கிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினரின் அர்ப்பணிப்பே முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த அர்ப்பணிப்பை சிறப்பிக்கும் வகையில் இன்று (09.12.2025) திருச்செந்தூர் உதயம் இன்டர்நேஷனல் மஹாலில் நடைபெற்ற பாராட்டு விழாவில், திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய உட்கோட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அமைதியை காக்கும் மௌன வீரர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பாராட்டு, காவல்துறையின் அர்ப்பணிப்புக்கு சமூகத்தின் நன்றியை எடுத்துக்காட்டுவதாகும்.