தூத்துக்குடி மாவட்டம், 09.12.2025 —
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 06.11.2025 அன்று நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு எதிரிகள், ராஜா (19) மற்றும் சிவா (19), இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையின் பரிந்துரையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சிப்காட் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாண்டு மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 136 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.