தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கம் (TCOA) தூத்துக்குடி மாவட்ட 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மாநாடு தூத்துக்குடி பாளை ரோடு, வாட்டர் டேங்க் எதிரிலுள்ள மணி நகர் பகுதியில் அமைந்த ராமலெட்சுமி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாநாடு தொடங்குவதற்கு முன் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் மாநில தலைவர் வெள்ளைச்சாமி அவர்கள் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் மாநில துணை தலைவர், மாவட்ட தலைவர் ராஜேந்திர பாபு.
வரவேற்புரை மாவட்ட செயலாளர் கண்ணன், நன்றியுரை – மாவட்ட பொருளாளர் ராஜூ
எழுச்சியுரை நிகழ்த்த உள்ளவர்
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பாதுகாவலர் நிறுவனத் தலைவர் (TCOA & MD – TCCL Group of Company) சகிலன்
சிறப்புரை வழங்க உள்ளவர்கள்:
MD TIC Fiber தணிகைவேல், மாநில தலைவர் வெள்ளைச்சாமி, மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் கோவர்த்தனன், மாநில துணை தலைவர்கள் சண்முகசுந்தரம், தாமோதரன், வீரமுத்து ஆகியோர்.
முன்னிலையில் கலந்து கொண்டவர்கள் தூத்துக்குடி முன்னாள் மண்டல சேர்மன் செல்வராஜ், விளாத்திகுளம் சக்ரவர்த்தி, ஓட்டப்பிடாரம் கெங்குராஜ், கோவில்பட்டி ரவி சங்கர், திருச்செந்தூர் பொன்ராஜ், எட்டயபுரம் அருபநாதன், திருவைகுண்டம் கிருஷ்ணன், சாத்தாங்குளம் கார்த்தீசன், ஏர்ல் சங்கரநாராயணன், வழக்கறிஞர் குழு ஏ.பி.செல்வின் உள்ளிட்டோர்.
வாழ்த்துரை வழங்கி வருகிறார்கள்
மாநில துணை தலைவர் அருணகிரி, மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்தன், மாநில துணை தலைவர் தமிழன், மாநில துணை செயலாளர்கள் கந்தன், குமரேசன், ஆனந்தன், சேகர், வெங்கடேசன், பாபு, சிவக்குமார், மாநில துணை தலைவர் பிரகதீஸ்வரன், தங்கையன் உள்ளிட்டோர்.
மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தாலுகா நிர்வாக குழு உறுப்பினர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர் தோழர்கள் மற்றும் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.