விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், அயன்செங்கல்படை ஊராட்சி, S. அருணாச்சலபுரம் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம், கிளைச் செயலாளர்கள் சண்முகபெருமாள், குமரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, பாக முகவர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.