ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் 10 பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி ஒர்க் பயிற்சி தொடங்கியுள்ளது. ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பயிற்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், மகளிர் திட்ட மேலாளர் லட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கஸ்தூரி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெயக்கொடி, எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.