தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, சமீபத்திய கனமழைக்கு பிறகு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைக் காண மேயர் ஜெகன் பெரியசாமி இன்று இருசக்கர வாகனத்தில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர், ரஹ்மத் நகர், ராம் நகர் மற்றும் ஹவுசிங் போர்டு பகுதிகளில் வடிகால் வழியாகவும், மின் மோட்டார் அறைகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருவதை அவர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
பெரிய வாகனங்களை தவிர்த்து, குறுகிய தெருக்கள் மற்றும் மக்கள் வசிப்பிடங்களுக்கு எளிதாகச் சென்று நிலையை உணர்வதற்காக இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்திய மேயரின் இந்த திடீர் ஆய்வு அப்பகுதி மக்களிடையே அதிக கவனத்தை பெற்றது.
ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.