தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவிலின் 7வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோவில் விழா குழுவினரும் வட்ட செயலாளருமான பிரவின் ஜெயக்குமார் ஏற்பாட்டில், மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் விழா கமிட்டியினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
நிகழ்வில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய், வட்ட செயலாளர் சகாயராஜ், புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநர் சுப்பிரமணியன், அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகிகள் பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், வட்ட பிரதிநிதிகள் அய்யப்பன், ஜோதிகா, மாரி, சுப்புராஜ், மகளிரணி ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.