தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாகச் செல்ல தேவையான அளவு ஆழம் தண்ணீர் வழிகளில் உருவாகும் நோக்கில் கடற்கரையில் நடைபெற்று வரும் ஆழப்படுத்தும் (Sea Trenching) பணிகளின் போது எடுக்கப்பட்ட மணலை அகற்றித் தர வேண்டும் என மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, மணல் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரேஸ்புரம் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த பணிகள் நடைபெறும் நிலையை, மீனவர்கள் குறைதீர் பெறும் வகையில் உடனடி நடவடிக்கையாக கண்காணித்து வருவதாக மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் பங்குத் தந்தையர்கள், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.