தூத்துக்குடி மாநகரம் அய்யர்விளை பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை பார்வையிட்டார்.
அங்கு பம்ப் ரூம் பகுதியில் ஏற்பட்டிருந்த கழிவு மற்றும் மணழிவு அடைப்புகள் காரணமாக நீர் வெளியேற்றம் தடைபட்டிருந்ததை ஆய்வு செய்த அமைச்சர், உடனடியாக அதிகாரிகளுக்கு தேவையான உபகரணங்களை பயன்படுத்தி அடைப்புகளை அகற்றி, நீர் வெளியேற்ற பணிகளை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வடிகால் செயல்பாடு மீண்டும் சீர்படுத்தப்படத் தொடங்கியது.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர் உள்ளிட்டோர் அமைச்சருடன் இணைந்து நிலைமையை கண்காணித்தனர்.
மழை காரணமாக சிரமத்தில் இருந்த பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.