செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 89-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுதேசி கழகம் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாகைகுளத்தில் குருபூஜை விழா நடைபெற்றது.
விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா முன்னிலையில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப்பிரமணியன், சுதேசி கழக இளைஞரணி செயலாளர் வசந்த், ஒன்றிய துணை செயலாளர் நாராயணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி மாரிச்செல்வன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.