திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 89வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மாவட்ட பொறுப்பாளர் T.V.A. பிரைட்டர் தலைமையில் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, சிதம்பரனாரின் தியாகத்தையும் தேசப்பணியையும் நினைவுகூர்ந்தனர்.