வ.உ.சிதம்பரனார் அவர்களின் 89-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் இன்று நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அறிவுறுத்தலின்பேரில் நிர்வாகிகள், இளைஞர் மன்றத்தினர், பெண்கள் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் தலைமையில் வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர் மாசாணம், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, கிழக்கு மண்டல வரலாறு சத்தியசீலன், ஏரல் மண்டல் பிரபாரி ராஜா, விருந்தோம்பல் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், தெற்கு மண்டல தலைவர் மாதவன், தொழில்துறை மாவட்ட தலைவர் சங்கர், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல், பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மேற்கு மண்டல பொதுச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.