Breaking News

தூத்துக்குடி தெப்பக்குளம் அழகுபடுத்தல் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்று வரும் புதிய பூங்கா மற்றும் ஓய்விட அமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்த நிலையோடு, தெப்பக்குளத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்து மேலும் காட்சியழகுடன் மாற்றுவதற்கான பணிகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு. சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். பணிகள் சீராக நடைபெறுகின்றனவா, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து வசதிகளும் துல்லியமாக அமைக்கப்படுகின்றனவா என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மேயர் குழுவுடன் கலந்துரையாடினார்.

தூத்துக்குடி நகரத்துக்கு மேலும் ஒரு சிறப்பான பொது ஓய்விடம் உருவாகும் வகையில் பணிகள் விரைவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • Share on

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிரடி படகு போட்டி: அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கம்!

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் மணல் அகற்றும் பணி – மேயர் ஜெகன் நேரில் ஆய்வு!!

  • Share on

Trending News