தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில், இரண்டாம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் உருவாகி வரும் புதிய பூங்கா மற்றும் ஓய்விடப் பணிகள் விரைவில் நிறைவு பெறும் வகையில் நடைபெறுகின்றனவா என்பதை நேரில் பார்வையிட்டார். பின்னர், கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் வைத்திருந்த கோரிக்கையின் பேரில் அந்த இடத்தினையும் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் அந்தோணி மார்சலின், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.