புதூர் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரம் ஊராட்சிக்குட்பட்ட N.சின்னையாபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19.04 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு G.V. மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமித்ரா, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் முருகன், முத்துராஜ், பாக முகவர் பால்ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர் சுபாஷ், மகளிரணி சத்யா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.