ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லங்கிணறு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரத்தையும் பராமரிப்பையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா. ஆய்வின்போது மாணவர்களுடன் உரையாடி, வழங்கப்படும் உணவின் தரம், சுவை, சுத்தம் உள்ளிட்ட அம்சங்களைப் பற்றி கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் உடன் இருந்தார்.
தொடர்ந்து திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மேல ஆழ்வார்தோப்பு சந்திரா மஹாலில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட பிரதிநிதி த.அருண்கிருஷ்ணன் - சு.சங்குபுஷ்பம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிகழ்வுகளில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.