தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணியின் கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எஸ். செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
புதிய பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, அமைப்பின் நோக்கங்கள் மற்றும் பண்பாட்டு வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி. பி. ஜெயக்குமார் மற்றும் கோட்டச் செயலாளர் எம். ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் கே. எஸ்.ராகவேந்திரா நன்றியுரை ஆற்றினார்.