விளாத்திகுளம் வட்டம், வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மாரிபாண்டி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிராஜ், பெப்பின்காகு, பால்பாண்டி, எப்ரோமீனாமேரி, சந்திரமோகன், ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் செல்வின், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜோசப் திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
மேலும் கிளைச் செயலாளர்கள் சேவியர், நல்லமுத்து, ஆதிநாராயணன், கண்ணன், கிருஷ்ணன், ரவி, சடையாண்டி, முனியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.