Breaking News

தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை!!

  • Share on

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் எனத் தியாக வாழ்வு வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன்.உ.முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவும் 63-வது குருபூஜை விழாவும் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த கௌதம் பாண்டியன், அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர் நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன், அருண் பிரகாஷ், ஆகாஷ் பாண்டியன், மணிகண்டன் தீனதயாளன், அருள்ராஜ், அருண் பாலா, முனீஸ், மனோ பாண்டியன் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் மற்றும் மகளிர் பலர் கலந்து கொண்டு தேவருக்கு புகழ்வணக்கம் செலுத்தினர்.


  • Share on

தெய்வத் திருமகனாருக்கு மரியாதை – தேவர் ஜெயந்தி முன்னிட்டு கவுன்சிலர் சரவணகுமார் மாலை அணிவித்து வணக்கம்!!

தேவர் ஜெயந்தி விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மரியாதை!!

  • Share on

Trending News