வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமையிலானது. மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க வேண்டிய முகாம்கள் மற்றும் தேவையான வசதிகள், கடந்த ஆண்டு பெய்த மழையில் அதிக பாதிப்பை சந்தித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் ராஜா, பானு மற்றும் உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.