ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் பக்கபட்டி மற்றும் சென்னல்பட்டி கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதத்தை அதிகாரிகளிடம் காண்பித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் ஏஞ்சலின், உதவி வேளாண்மை அலுவலர் செல்வசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய், ஊராட்சி செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ சண்முகையா தெரிவித்தார்.