Breaking News

எம்.எல்.ஏ. எம்.சி. சண்முகையா மணல் மூட்டைகள் ஆய்வில் நேரில் பங்கேற்பு – பருவமழைக்கு முன்னேற்பாடு!!

  • Share on

வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில், குளங்கள் மற்றும் ஓடைகளில் ஏற்படும் உடைப்புகளை தற்காலிகமாக அடைக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதை நேரில் ஆய்வு செய்ய ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் வந்தடைந்தார். ஆய்வின் போது, மணல் மூட்டைகள் தேவையான இடங்களுக்கு முன்கூட்டியே கொண்டு செல்லுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த முன்னேற்பாட்டால், பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதே நோக்கம்.


  • Share on

எம்.சி. சண்முகையா ஆய்வு – ஒட்டப்பிடாரம் குளங்களில் மழைநீர் சேமிப்பு பணிகள் தீவிரம்!

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை: மாநில மீட்பு குழு 70 பேர் முழு தயார் நிலையில்!!

  • Share on

Trending News