Breaking News

கோரம்பள்ளம் குளம் கரை நிலைமையை ஆய்வு செய்தார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!

  • Share on

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு காலங்கரை கிராமத்தில், கடந்த ஆண்டு கனமழையின்போது கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழைக்காலங்களில் குளத்தின் கரைகள் நிலைபேறு பெறும் வகையில் தேவையான பராமரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் நஸ்ரின் வினு, ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, கிளை செயலாளர்கள் பெருமாள், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  • Share on

புதுக்கோட்டையில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் – பொதுமக்கள் நலனில் உறுதுணையாக அரசு!!

சடையனேரி கால்வாய் திறப்பில் பாஜகவின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வெற்றி!!

  • Share on

Trending News