Breaking News

ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தலையீட்டில் மருதன்வாழ்வு குளம் மடை சரிசெய்யப்பட்டது!!

  • Share on

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மருதன்வாழ்வு கிராமத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வருகை தந்தபோது, கிராம மக்கள் எங்கள் கிராமக் குளத்தின் மடை சேதமடைந்து நீர் வீணாகப் போகிறது எனக் கூறி கோரிக்கை வைத்தனர்.

கிராம மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற எம்.சி.சண்முகையா சம்பந்தப்பட்ட துறையினருடன் தொடர்பு கொண்டு மடை பழுது பார்க்கும் பணியை விரைவாக செய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று மருதன்வாழ்வு கிராமக் குளத்தின் மடை சரிசெய்யப்பட்டது.

கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்த மருதன்வாழ்வு கிராம மக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த எம்.சி.சண்முகையாவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.


  • Share on

தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு: “பசுமையான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கான காலநிலை நடவடிக்கைகள்” குறித்து விழிப்புணர்வு!!

பாஜக மீனவர் பிரிவு மாநில அளவிலான நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

  • Share on

Trending News