தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒட்டநத்தம் கிராமத்தில், தேசதந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2) கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை, மின்விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், சுகாதாரத்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு உறுதிமொழியும் அனைவரிடமும் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டாச்சியர் சண்முகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோகுல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.