தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் எப்போதும் வென்றான் ஊரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜி.எஸ்.டி (GST) வரி குறைப்பு குறித்து விளக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் வடக்கு மண்டலத்தின் தலைமையில் சிறப்பாக நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணா கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் சேதுராஜ், விவசாயிகள் அணி மாவட்ட தலைவர் ஜெயகண்ணன், பிரச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் கந்தசாமி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயசங்கர், ஒன்றிய தலைவர் நாகஜோதி சிவா, இளைஞர் அணி ஒன்றிய தலைவர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் அவசியம், அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பெறும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டன.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.