Breaking News

பொதுமக்கள் நலன் கருதி – திரேஸ்புரம் பாதாள சாக்கடை, வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சுத்திகரிப்பு மற்றும் அடிப்படை வசதி பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில், திரேஸ்புரம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளையும், அப்பகுதியில் உள்ள மேட்டுப்பட்டியிலுள்ள வடிகாலையும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகள் எளிதில் மற்றும் விரைவில் நிறைவு பெற்று, மக்கள் சிரமமின்றி பயன்பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், சுத்தம் மற்றும் பராமரிப்பில் எவ்வித குறையும் இல்லாமல் கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


  • Share on

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!

பொது மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் – சண்முகபுரம் வடிகால் விரைவில் நீட்டிப்பு!!

  • Share on

Trending News