Breaking News

தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு ஆட்டோ ஓட்டுநர் புரட்சி தொழிலாளர்கள் சங்கம் 3ஆம் ஆண்டு சரஸ்வதி–ஆயுத பூஜை விழா!!

  • Share on

தூத்துக்குடி மாநகர் மாவட்டம் முத்தையாபுரம் தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே, முத்தையாபுரம் தோப்பு ஆட்டோ ஓட்டுநர் புரட்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 1 அக்டோபர் 2025 புதன்கிழமை இரவு 8 மணிக்கு 3ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவை சங்க நிர்வாகி முருகானந்தம் தலைமையில், சங்க நிர்வாகிகள் வேல்ராஜ் மற்றும் குட்டி தம்பி முன்னிலையில் நடத்தினர். இதில் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் ஆட்டோ சங்க கௌரவ ஆலோசகர் மா. மாரிச்செல்வம் சிறப்புரையாற்றி விழாவிற்கு சிறப்பு ஏற்படுத்தினர். விழாவில் மாவட்ட ஆட்டோ சங்க செயலாளர் N. ஹனிபா, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் M. அந்தோணிசாமி, மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் C. மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு ஐஎன்டியுசி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது!!

பிரையண்ட் நகர் பகுதி திமுக சார்பில் சரஸ்வதி – ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!

  • Share on

Trending News