தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் பூத் பாகம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் எப்போதும் வென்றான் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக செயலாளர் போடுசாமி தலைமையேற்றார். அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரதீப் முகவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ கடம்பூர் ராஜூ அவர்கள் முகவர்களுக்கு அரசியல் நிலைமை மற்றும் கட்சி வலுவூட்டும் நடவடிக்கைகள் குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, உற்சாகமான உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் தனசிங் மகேஷ், விளாத்திகுளம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன், ஓட்டப்பிடாரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்ணன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார், கோயில்பட்டி கவுன்சிலர் கவியரசன், வேடநத்தம் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனுடன் 20 கிளை செயலாளர்கள், பூத் பாகம் முகவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.