தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளையும், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் உள்ள வடிகால் பகுதிகளில் விரைவில் துவங்கவிருக்கும் தூர் வாரும் பணிகள் நடைபெறவுள்ள இடங்களையும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து கலந்து கொண்டனர்.