ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சி கீழப்பூவாணி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பொது விநியோகக் கடை கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து ரேசன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, திட்ட அலுவலர் (ஓய்வு) தேவேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ்காந்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பையா, ஊராட்சி செயலர் முருகன், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் பிரேமா, கிளை செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாத சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.