தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலை, கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், இப்பணிகள் சூழல் பாதுகாப்பு முறைகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டார். பணியின் தரம், முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, பொதுமக்கள் வசதிக்காக பணிகளை விரைவாக நிறைவு செய்ய தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், கவுன்சிலர் ராஜேந்திரன், வட்டச் செயலாளர் நவநீதன், வட்ட பிரதிநிதிகள் ரஜினி முருகன், பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.