Breaking News

பா.ஜ.க முன்னணி தலைவர் H.ராஜாவை சந்தித்தார் எழுத்தாளர் பெ.செந்தில்குமார்!!

  • Share on

பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பெருமதிப்பிற்குரிய திரு. H. ராஜா அவர்களை, KGF நிறுவனர் எழுத்தாளர் பெ. செந்தில்குமார் இன்று (22.09.2025) சந்தித்து மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பிற்கு ராஜபாளையம் சுகந்தம் திரு. N.S. ராமகிருஷ்ணன் அழைத்து சென்றார். வடபழனியில் உள்ள H. ராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அரசியல், வரலாறு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுமார் ஒரு மணி நேரம் உரையாடல் நடைபெற்றது.

"பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூலைப் பற்றிய விழிப்புணர்வும், அதற்கான வெளீயீட்டு நிகழ்வுகளும் குறித்து ஏற்கனவே H. ராஜா அவர்கள் அறிந்திருந்ததாகவும், அந்த நூலை நேரடியாக எழுத்தாளரிடமிருந்து பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் மேதகு ஆளுநர் திரு. R.N. ரவி அவர்களின் பண்புகள் மற்றும் சிறப்புகள் குறித்து H. ராஜா பாராட்டிப் பேசினார். அத்துடன், தற்போது நடைபெற்று வரும் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் – பாகம் 2 நூல் தயாரிப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அடுத்தடுத்த வெளீயீட்டு விழாவில் தாங்களும் கலந்துகொள்ள வேண்டும் என எழுத்தாளர் அழைப்பு விடுத்ததற்கு H. ராஜா அவர்கள் உறுதியாக சம்மதித்தார்.


  • Share on

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் பேரணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு!!

அத்திமரப்பட்டி – முள்ளக்காடு பகுதியில் மழைக்கு முன் வடிகால் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!

  • Share on

Trending News