தூத்துக்குடி “அறம் 1 செய்வோம் கல்வி மற்றும் நற்பணி அறக்கட்டளை” சார்பில், ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி T. சவேரியார்புரம் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் மகளிர் கல்லூரியின் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை உதவிப் பேராசிரியர் ஏ. மரிதங்கம், எம்.எஸ்., பி.எச்.டி., மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவில் இருந்து டாக்டர் லாவண்யா குணமாலை அவர்கள் ஆதரவளித்தார். சிறப்பு விருந்தினர்களாக T. சவேரியார்புரம் பங்குத்தந்தை அருட்தந்தை குழந்தை ராஜன், ரெவரன்ட் ஐ. ஜெயச்சந்திரன், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு, ஆரோக்கியம் மற்றும் சரியான உணவுப் பழக்கங்களை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.