Breaking News

பசுமையைப் பேணுவோம் – ALL CAN TRUST சார்பில் 384வது வார மர நடும் விழா!!

  • Share on

தூத்துக்குடி, 21.09.2025 –
ALL CAN TRUST அமைப்பின் 384வது வாராந்திர மரம் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது. தூத்துக்குடி-மடத்தூர் செல்லும் சாலையில் திரவியரத்தினம் நகர், பாபா கோயில் அருகே மரக்கன்றுகள் நட்டு பசுமை சூழலை உருவாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

சமூக பொறுப்புணர்வுடன் தொடர்ந்து வாரந்தோறும் நடைபெறும் இந்த முயற்சியின் மூலம், நகரமும் சுற்றுப்புறமும் பசுமையால் சூழ வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் உற்சாகமாக பங்கேற்று கன்றுகளை நட்டு, அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

பசுமை சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில், ALL CAN TRUST தனது பசுமை பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.


  • Share on

அமரர் கே.வி.கே.சாமி 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா ஆரோக்கியபுரத்தில் நடைபெற்றது!!

மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்த தூத்துக்குடி மாவட்ட ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் – 2025

  • Share on

Trending News