தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ (ESI) மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தாசில்தார் முரளிதரன் ஆகியோர் உட்பட பல துறை சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்ற நிலை, தொழிலாளர்கள் பயன்பெறும் வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கனிமொழி கருணாநிதி விரிவாக ஆய்வு செய்து, விரைவில் பணிகள் நிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த இஎஸ்ஐ மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், தூத்துக்குடி மற்றும் அருகிலுள்ள தொழிலாளர் சமூகத்திற்கு பெரிய அளவில் மருத்துவ சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.