தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாம் கேட் அருகிலுள்ள காந்தி சிலையைச் சுற்றிய பகுதிகளில் சிறிய பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறவும், பொழுது போக்கவும் வசதியாக இருக்கைகளுடன் கூடிய இந்த சிறிய பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
இப்பணிகள் நடைபெறவுள்ள இடத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.