Breaking News

தூத்துக்குடியில் வடிகால் பணிகள் – மக்களின் நலனுக்காகக் களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்தை ரோடு பகுதியில் விரைவில் தொடங்கவுள்ள வடிகால் பணிகள், மேலும் பிஎம்சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை முழு தீவிரமாக நடைபெற்று வரும் பணிகளைத் தாமாகவே நேரில் சென்று பார்வையிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள்.

மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் மக்கள் எளிதில் இயங்குவதற்காக வடிகால் பணிகள் எவ்வாறு நடைமுறையில் உள்ளன என்பதை ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் பல்வேறு ஆலோசனைகளையும் மேம்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் மேயர் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.

மக்களின் தினசரி வாழ்வை எளிதாக்கும் விதத்தில் இப்பணிகள் விரைவாக முடிவடைய உறுதி அளிக்கப்பட்டது.


  • Share on

ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா முன்னிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!

ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!!

  • Share on

Trending News